Monday, October 4, 2010

நான்

நான் என்பது , தற்பெருமை!  இப்படிச் சிலர்..  நான் என்பது தலைக்கனம்!இப்படிச் சிலர் ..  நான் என்பது,  தன்னம்பிக்கை!  இப்படிச் சிலர் .. தன்னை உணர்ந்து,  தலைநிமிர்ந்து நான்!  என்றால்,  அது தற்பெருமையல்ல..  தலைக்கனமல்ல ..  தன்னம்பிக்கைதான்!  தன்னை உணராதவன் -  நான் என நிமிர்வது கூத்து! .. 

ஆசை

பொன்னாசை,  பெண்ணாசை,  போகேனே என்குதே ..
மக்கள் சுற்றத் தாசை,  மறக்கேனே என்குதே..
திக்கரசாம் ஆசையது,  தீரேனே என்குதே..

புகழ் ?

புகழ் எப்படி வருகிறது? ?

சிலர் வாங்குகிறார்கள்,  சிலர் வாங்கப்போய்,  வழுக்கி விழுகிறார்கள்..   சிலர் தாங்குகிறார்கள்,  சிலர் தாங்க முடியாமல்,  தலை கவிழ்கிறார்கள்..  சிலர் தியாகம் செய்து புகழ் பெறுகிறார்கள்.. சிலர் புகழுக்காக தியாகம் செய்கிறார்கள்..  ஒரு வகையில் புகழும் ஒரு போதைதான் ..