Tuesday, October 5, 2010

அறியொணாத சீவர்

சித்தர் என்றும்,  சிறியர் என்றும்,  அறியொணாத சீவர்காள்..
சித்தர் இங்கு இருந்த போது,  பித்தர் என்று எண்ணுவீர் ..
சித்தர் இங்கு இருந்தும்,  என்ன பித்தன் நர்டிருப்பரே ..
அத்தன் நாடும்,  இந்த நாடும் அவர்களுக்கெலாமொன்றே .. 

சாபம்

சாபம் கொடுத்திட லாமோ ? - விதி
தன்னை நம்மாலே தடுத்திடலாமோ ?
கோபந் தொடுத்திடலாமோ ? - இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ ?

விதி ..

எல்லாம் விதின்னு புலம்பறவங்களப்பற்றி என்ன நினைக்கிறீர் சித்தரே?


ஒருவனது முயற்சிகளை அழித்து, முடமாக்கும் மோசமான சதியே விதி... இவர்கள் கடைசிவரை புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். . அல்லும் பகலும்
தெருக் கல்லாய் இருந்துவிட்டு
அதிர்ஷ்டமில்லையென்று
அலட்டிக் கொள்வார் ..
முழித்துக் கொண்டோர் எல்லாம்
பிழைத்துக் கொண்டார் .. ..